Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழைவேண்டி திருக்கல்யாண உற்சவம் பாலமலை கோவிலில் பக்தர்கள் பாதம் காக்க ஏற்பாடு! பாலமலை கோவிலில் பக்தர்கள் பாதம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி 11 குதிரைகளை வைத்து அஸ்வமேத யாகம்
எழுத்தின் அளவு:
மழை வேண்டி 11 குதிரைகளை வைத்து அஸ்வமேத யாகம்

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2019
01:07

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே, 11 குதிரைகளை வைத்து மழை வேண்டி, அஸ்வமேத யாகம் செய்தனர். மேட்டுப்பாளையம் பெள்ளாதியை அடுத்த, சின்னத்தொட்டிபாளையத்தில் அமிர்தவர்ஷினி உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது.

இங்கு நான்காவது ஆண்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது. கடந்த மாதம், 28 அன்று விநாயகர் வழிபாடுடன் நிகழ்ச்சி துவங்கியது. முதல்நாள் காயத்ரி மந்திரம், மகாலட்சுமி ஹோமம், நவகிரஹம், 108 மூலிகை ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டாம் நாள் அமிர்தவர்ஷினி, காமாட்சி அம்மனுக்கு அலங்கார பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அன்னைக்கு, 1,008 குங்கும அர்ச்சனை நடந்தது.மாலையில் சிறுமுகை ஆலாங்கொம்பு பத்ரகாளியம்மன் கோவில் பவானி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள், பசுமாடு, குதிரைகள் ஆகியவற்றை சகல வாத்தியம் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. நேற்று காலையிலிருந்து மதியம் வரை, மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், 11 குதிரைகளை வைத்து அஸ்வமேத யாக பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று காலை சேரன்நகர் சித்தி விநாயகர் கோவிலிருந்து, ஊர்பொது மக்கள் சார்பாக கோவிலுக்கு, சீர்வரிசை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதைத் தொடர்ந்து, 10:45 லிருந்து, 11:45 மணி வரை, நஞ்சுண்டேஸ்வரருக்கும், அமிர்தவர்ஷினி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar