வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, வைகாசி மாதம் மூன்றாவது பிரதோஷ வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது.மாலை, 5:30 மணிக்கு சிவபெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், சந்தனம், திருநீறு, குங்குமம், பஞ்சாமிர்தம், அரிசிமாவு உள்ளிட்ட, 16 வகையான அபிேஷகம் செய்யப்பட்டது.அதன் பின், மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ரிஷப வாகனத்தில் காசிவிஸ்வநாதர் தேவியருடன் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.