நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மாதா கோவிலில் தேர் திருவிழா நடந்தது.சி.என்.பாளையம் மாதா கோவிலில் நேற்று முன்தினம் (ஜூன்., 30ல்) தேர் திருவிழா நடந்தது. திருவிழாவை முன்னிட்டு அன்று சிறப்பு திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு தேரில் மாதா பவனி நடந்தது. தேர் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது.