Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காஞ்சியில் மூலவர் வரதராஜ பெருமாளை ... ராமேஸ்வரம் நடராஜர் கோயில் ஜூலை 8ல் கும்பாபிஷேகம் ராமேஸ்வரம் நடராஜர் கோயில் ஜூலை 8ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயிலில் ஜூலை 16 முப்பழ அபிஷேகம்
எழுத்தின் அளவு:
மீனாட்சி அம்மன் கோயிலில் ஜூலை 16 முப்பழ அபிஷேகம்

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2019
11:07

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஊஞ்சல் உற்ஸவ விழாவை முன்னிட்டு ஜூலை 16ல் மூலஸ்தான சொக்கநாதப் பெருமானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ பூஜை, அபிஷேகம் நடக்கிறது. இக்கோயிலின் ஊஞ்சல் உற்ஸவம் ஜூலை 6 முதல் 15 வரை நடக்கிறது. இந்நாட்களில் சாயரட்சை பூஜைக்கு பின் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி சுவாமி சன்னதி 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளி ஊஞ்சல் கொண்ட பின் மாணிக்கவாசகர் பெருமானின் திருவாசகத்தின் திருப்பொன்னுாஞ்சல் பதிகம் தல ஓதுவாரால் ஓதப்பட்டு, அதனை நாதஸ்வர வித்வான்கள் ஒன்பது ராகத்தில் இசைத்தவுடன் தீபாராதனை முடிந்து இரண்டாம் பிரகாரம் சுற்றி சேர்த்தியாகும்.

ஜூலை 7 இரவு ஆனி உத்திரம் நடக்கிறது. இரவு 3:00 மணிக்கு வெள்ளியம்பல நடராஜர் சிவகாமி அம்மனுக்கு சுவாமி கோயில் ஆறு கால் பீடத்திலும், இதர நான்கு சபை நடராஜர் சிவகாமியம்மன் களுக்கு சுவாமி கோயில் இரண்டாம் பிரகாரம் 100 கால் மண்டபத்திலும் ஆனி உத்திர திருமஞ்சனம் நடக்கிறது. பின் கால பூஜைகள் முடிந்து காலை 7:00 மணிக்கு மேல் பஞ்ச சபை நடராஜர் சிவகாமியம்மன் மாசி வீதிகளில் புறப்பாடாகும். விழாவை முன்னிட்டு அபிஷேகப் பூஜை பொருட்களை பக்தர்கள் ஜூலை 7 இரவு 7:00 மணிக்குள் கோயிலில் வழங்கலாம். ஆகம விதிகளின் படி ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஒவ்வொரு வகையான திரவியங்களை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. இதன்படி ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஜூலை 16 ல் உச்சிக்கால வேளையில் மூலஸ்தான சொக்கநாதப் பெருமானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழப்பூஜை, அபிஷேகம் நடக்கிறது.

பக்தர்களின் பூஜைகளை ஏற்றுக்கொண்ட இறைவன் அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று வாழ அருள்பாலிப்பதாக ஐதீகம். ஜூலை 16 ஆனி ஊஞ்சல் உற்ஸவம் முடிவில் நான்கு சித்திரை வீதிகளில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடக்கிறது. விழா நாட்களான ஜூலை 6 முதல் 15 வரை கோயில், உபயதாரர் சார்பாக உபய திருக்கல்யாணம், தங்க ரத உலா ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது, என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar