Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்வ நாயகியம்மன் கோவிலில் அமாவாசை ... ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதிலமடைந்த ஆயிரம் ஆண்டு கோவில்: புதுப்பிக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
சிதிலமடைந்த ஆயிரம் ஆண்டு கோவில்: புதுப்பிக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2019
12:07

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகேயுள்ள கொங்கனேசுவரர் கோவிலை புதுப்பிக்க அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சோழ மன்னர்கள் ஆட்சி எல்லை கொங்கு மண்டலம் வரை பரவியிருந்தது. இந்த கால கட்டத்தில், அமராவதி ஆற்றங்கரையில் பல சைவ, வைணவ கோவில்கள் கட்டப்பட்டு, அதனை சார்ந்து புதிய கிராமங்கள் உருவாக்கப்பட்டன.

கடத்துார், காரத்தொழுவு, கொமரலிங்கம், கொழுமம் உள்ளிட்ட பல கிராமங்களில் கற்களை மட்டும் பயன்படுத்தி அமைத்த இந்த கோவில்கள் கற்றளிகள் என சிறப்பு பெயரில் அழைக்கப்பட்டன.மடத்துக்குளம் தாலுகா கடத்துார் அமராவதி ஆற்றங்கரையில், இந்த அமைப்பில், கொங்கனேசுவவரர் கோவில் கட்டப்பட்டது. கடந்த நுாற்றாண்டு வரை மிக சிறப்புடன் இருந்தது. பல ஆயிரக்கணக்கான மக்கள் வழிபட்டு வந்தனர்.ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது, போதிய பராமரிப்பு இன்றி, கட்டடம் சேதமடைந்துள்ளது. பக்கவாட்டு சுவர்களில் கற்கள் விழுந்து விட்டன. சுற்றுச்சுவர் இல்லாததால், சிலைகள் திறந்த வெளியில் உள்ளன.கருவறையில் லிங்கம் மட்டும் உள்ளது. சில சிலைகள் உடைந்து காணப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் முன்னோர்களின் அடையாளமாக உள்ள கொங்கனேசுவரர் கோவிலை புதுப்பிக்க வேண்டும்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், கோவிலைச்சுற்றி ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். குறுகிய பாதை வழியாக தான் செல்ல முடியும். மன்னர் ஆட்சி முறை, தானங்கள், பூஜைகள் குறித்த கல்வெட்டுக்கள் சிதிலமடைந்துள்ளன. சிறப்பு மிக்க கோவிலை புதுப்பிக்க நடவடிக்கை அறநிலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் ஏகாதசி விரதத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கைசிக துவாதசியை முன்னிட்டு நாளை நவ.,2ல் ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல மகர விளக்கு கால பூஜையின் போது பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5.00 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பவித்ர உத்சவம் இன்று முதல் 5 நாட்களுக்கு நடக்கிறது.பட்டர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar