நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு பிரத்தியங்கராதேவிக்கு ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடந்தது.
நடுவீரப்பட்டு, நரியன்ஓடை கரையில் உள்ள பாதாளகாளி மற்றும் பிரத்தியங் காரதேவி கோவிலில் நேற்று (ஜூலை 2ல்) ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலாயாகம் நடந்தது.மதியம் 1:00 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் கலச ஸ்தாபனம் செய்யப் பட்டு, யாக வேள்விகள் துவங்கியது. 1:30 மணிக்கு யாகத்தில் மிளகாய் வற்றல்கள் கொட்டப்பட்டு நிகும்பலாயாகம் நடந்தது.
தொடர்ந்து யாக வேள்வியில் வைக்கப்பட்ட கலசம் ஆலய உலாவாக வந்து பிரத்தியங்கரா தேவிக்கு கலச அபிஷேகம் நடந்தது. மதியம் 2:00 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 2:15 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.