பதிவு செய்த நாள்
03
ஜூலை
2019
02:07
திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்தூர், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று 2 ல், செவ்வாய்க்கிழமை என்பதால், மூலவருக்கு, காலை, 8:00 மணிக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது.மதியம், 12:00 மணிக்கு, உச்சிகால பூஜையும், மாலை, 3:00- மணி முதல், 4:30 மணி வரை ராகுகால பூஜை நடந்தது.இதே போல், நகரி, டி.ஆர்.கண்டிகையில் உள்ள தேசம்மன் கோவிலி லும், மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. காலை முதல், மாலை வரை தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.