அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், திருவாசகம் வாசித்தல் நிகழ்ச்சி நடந்தது. சிவனடி யார்கள் கூட்டம் சார்பில், ஒவ்வொரு மாதமும், திருவாதிரை நாளில், அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த மாத நிகழ்வு, கோவிலில், மகா மண்டபத்தில் நேற்று (ஜூலை 2ல்) நடந்தது. காலை 6:45 மணிக்கு, திருவாசகம் வாசித்தல் துவங்கி, மதியம் நிறைவு பெற்றது. அன்னூர், புளியம்பட்டி பகுதியிலிருந்து சிவனடியார்கள் பங்கேற்றனர்.