மதுரை: மதுரையில் திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி மற்றும் இசைக் கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான தேவாரம், திருவாசகம் பாடல்கள் ஒப்பித்தல் போட்டி நடக்கிறது.
ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் கூறியதாவது: 6, 7ம் வகுப்பு மாணவர்கள் தேவாரம் பதிகம் ஒன்று, திருவந்தியார் (திருவாசகம்). 8, 9ம் வகுப்பு மாணவர்கள் சிவபுராணம், திருப்பொற் சுண்ணம், தேவாரம் பதிகம் இரண்டு. இப்போட்டிகள் தானப்ப முதலி தெரு திருவாவடுதுறை ஆதீன மடத்தில் ஜூலை 10 காலை 9:30 முதல் பகல் 2:00 மணி வரை நடக்கிறது.
ஒவ்வொரு பள்ளிக்கும் 8 முதல் 10 மாணவர்கள் வரை போட்டிக்கு அனுமதிக்கப்படுவர். இசை ஆசிரியர் சுரேஷ் சிவனின் 94439 30540ல் முன்பதிவு செய்யலாம், என்றார்.