பதிவு செய்த நாள்
07
ஜூலை
2019
02:07
எலச்சிபாளையம்: எளையாம்பாளையம் மதுரை வீரன் கோவிலில், நாளை கும்பாபி?ஷகம் நடக்கவுள்ளது. எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை கிராமம், எளையாம்பாளையத்தில், செல்வவிநாயகர், செல்வமுத்து மாரியம்மன், மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள், மகாசக்தி காளியம்மன் ஆகிய கோவில்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இன்று, கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல், புனித தீர்த்தம் எடுத்துவருதல், வாஸ்துசாந்தி, கும்பலங்காரம், பூர்ணாகுதி, சுவாமி சிலைகள் கண்திறப்பு, சுவாமி பிரதிஷ்டை, அம்பிகைக்கு எண் வகை மருந்து சாற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை அதிகாலை, 4:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, நாடி சந்தானம், இரண்டாம் கால யாக பூஜை, கலசங்கள் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், காலை, 5:15 மணிக்கு மேல், 6:15 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தம் ஊற்றி கும்பாபி?ஷகமும் நடைபெறும். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.