திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா சுவாமிகளுக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரமாகி காப்பு கட்டப்பட்டது. சிறப்பு தீபாராதனைக்கு பின் சுவாமி கோயில் ஆஸ்தான மண்டபத்தை வலம் வந்து திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளினார்.
அங்கு கோயில் ஓதுவார்களால் தேவாரம் பாடப்பட்டு 30 நிமிடங்கள் சுவாமி ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி முடிந்து தீபாராதனை நடந்தது. ஜூலை 15 வரை இவ்விழா நடக்கும். முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 16 உச்சிகால பூஜையின் போது மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, துர்க்கை அம்மன், கற்பக விநாயகர், சத்தியகிரீஷ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை, உற்ஸவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னதிகளில் மா, பலா, வாழை படைக்கப்பட்டு பூஜைகள் நடக்கும். இரவு யானை மண்டபத்தில் உற்ஸவர் எழுந்தருளி கோயில் யானை தெய்வானைக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்படும்.