சிவகங்கை: சிவகங்கை சிவன் கோயிலில் விஸ்வநாதர்- விசாலாட்சி அம்பாளுக்கு ஆனி திருக்கல்யாணம் நேற்று நடந்தது. ஆனி உற்ஸவ விழாவை முன்னிட்டு காளை வாகனத்தில் விசாலாட்சி, பிரியாவிடையுடன் விஸ்வநாதர் எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சுவாமி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். மாலை 6:05 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சுவாமி, அம்பாளுக்கு மங்கள நாணை சூட்டி திருக்கல்யாணத்தை நடத்தினர். இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, நாயன்மார்கள் வீதி உலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.