பழநி:பழநி முருகன் கோயிலைச் சேர்ந்த வடக்கு கிரிவீதியிலுள்ள தொட்டிச்சியம்மன், மாரத்தி யம்மன் கோயில் பல நூறுஆண்டு பழமைவாய்ந்தது.
இந்த கோயிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் முன்னோர்கள் பல ஆண்டுகளாக தொன்று தொட்டு வழிபடுகின்றனர். அவரது உதவியுடன், ரூ. 10 லட்சம் செலவில் கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து சுற்றிலும் கம்பிவேலிகள் அமைத்து திருப்பணிகள் முடிந்துள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று (ஜூலை., 7ல்) யாகசாலை பூஜைகள் துவங்கி, இன்று (ஜூலை., 8ல்) காலை 9:30 மணிக்கு நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார் செய்கின்றனர்.