பதிவு செய்த நாள்
12
ஜூலை
2019
12:07
கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூர், திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று (ஜூலை., 11ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, நேற்று (ஜூலை., 11ல்) காலை 6 மணிக்கு கெடிலம் ஆற்றில் இருந்து கரகம் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.தொடர்ந்து, வரும் 21ம் தேதி மாலை 3 மணிக்கு பகாசூரன் வதை, அன்னமிடும் நிகழ்ச்சி, 24ம் தேதி அம்மன் திருக்கல்யாணம், 25ம் தேதி கரக திருவிழா, 26ம் தேதி மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. 27ம் தேதி இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, இளைஞர்கள் உற்சவம் நடக்கிறது.ஏற்பாடுகளை திரவுபதி அம்மன் கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.