பதிவு செய்த நாள்
12
ஜூலை
2019
12:07
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பின்புறம், கழிவு நீர் தேங்கியிருந்ததால், அத்தி வரதரை தரிசிக்க வந்த பக்தர்கள், முகம் சுளித்தபடியே சென்றனர்.
அத்தி வரதர் வைபவத்தை காண, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, தினமும், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.நகர் முழுவதும், துாய்மைப்பணியில், காஞ்சிபுரம் நகராட்சி மட்டுமின்றி பல நகராட்சிகளைச் சேர்ந்த துப்புரவு ஊழியர்கள், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும், வரதர் கோவில் பின்புறம், வடக்கு மாட வீதியில் தேங்கியிருந்த கழிவுநீர் நேற்று (ஜூலை., 11ல்)காலை, 10:30 மணி வரை அகற்றப்படவில்லை.கோவிலுக்கு மிக அருகிலேயே, சுகாதார சீர்கேடு ஏற்படும்படி இருந்ததை, துப்புரவு ஊழியர்கள் கண்டுகொள்ளாததால், கோவி லுக்கு வந்து சென்ற பக்தர்கள், முகம் சுளித்தபடியே சென்றனர்.கொசு மருந்து புகை அடிப்பு காஞ்சிபுரத்தில், சமீபத்தில் பெய்த மழைக்கு, கொசு உற்பத்தியாகியுள்ளது. இதனால், காஞ்சி புரம் மஞ்சள் நீர் கால்வாய் ஓரங்களில் குடியிருப்பு பகுதி, திருக்காலிமேடு, சின்ன காஞ்சிபுரம், நத்தப்பேட்டை ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளில், இரவில், கொசுத்தொல்லை அதிகரித் துள்ளது. வரதராஜ பெருமாள் கோவில் அருகிலும், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால், பக்தர்களின் நலன் கருதி, நகராட்சி ஊழியர்கள், கொசு மருந்து புகை அடிக்கும் பணியை துவக்கியுள்ளனர்.