மதுரை: மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயிலில் ஜூலை 31 ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக மூன்று லட்சம் லிட்டர் தண்ணீர் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இக்கோயில்களுக்கு வரும் பக்தர்களின் வசதிகள், அன்னதான மடங்கள் குறித்து விருதுநகர், மதுரை கலெக்டர்கள், ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசித்து தகுந்த முடிவெடுக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி டி.கல்லுப்பட்டி யூனியன் அலுவலகத்தில் ஜூலை 17 ஆய்வு கூட்டம் கலெக்டர்கள் தலைமையில் நடக்கிறது. இதன் முடிவுகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். மழை பெய்யாததால் சதுரகிரியில் வறட்சி, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு பல லட்சம் பக்தர்கள் சதுரகிரி வருவர். அவர்களுக்கு தண்ணீர் வழங்க கோயில் அருகில் இரு கிணறுகளில் இருந்து எடுக்கப் படுகிறது. மூன்று லட்சம் லிட்டர் தண்ணீரை சேகரித்து பக்தர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.