Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நங்கநல்லுார், வரசித்தி விநாயகர் ... திருமங்கலம் அருகே ராயபாளையம் முக்தி நிலையம் மகா கும்பாபிஷேகம் திருமங்கலம் அருகே ராயபாளையம் முக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வளசரவாக்கம், கோவில் குளங்களை தூர் வாரும் மக்கள்: மழைநீர் வடிகால் இணைப்பு கொடுக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
வளசரவாக்கம், கோவில் குளங்களை தூர் வாரும் மக்கள்: மழைநீர் வடிகால் இணைப்பு கொடுக்க கோரிக்கை

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
12:07

வளசரவாக்கம்: வளசரவாக்கம், அகத்தீஸ்வரர் கோவில் குளம் மற்றும் திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் குளத்தை துார்வாரும் பணியில், அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், பொது நலச்சங்கங்கள், நீர்நிலை ஆர்வலர்கள், பொது மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், ’களமிறங்குவோம் நமக்கு நாமே’ என, நம் நாளி தழில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. நீர்நிலை குறித்த, விழிப்புணர்வு செய்திகளும், வெளி யிடப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள், ஏரி, குளங்களை துார் வாரும் பணி களில், ஆர்வத்துடம் ஈடுபட்டு வருகின்றனர்.வளசரவாக்கம், ஆற்காடு சாலையில், ஹிந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பின் கீழ் உள்ள, அகத்தீஸ்வரர் கோவில் குளம், பல ஆண்டு களாக துார் வாரப்படாமல் வறண்டு காணப்பட்டது.குளத்தை துார் வாருவதுடன், கரையை பலப்படுத்தி, தண்ணீர் தேங்க வழி செய்ய, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில், குளத்தை துார் வாரும் பணியில், பொதுமக்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:கோவில் குளத்தில், தண்ணீர் தேங்கி நின்ற போது, சுற்றுவட்டார பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் உயர்வாக இருந்தது. குளம் வறண்டு விட்ட நிலையில், தற்போது, 250 அடி ஆழத்திற்கு, ஆழ்துளை கிணறு அமைத்தும், தண்ணீர் கிடைக் கவில்லை.ஹிந்து அறநிலையத் துறை அனுமதி பெற்று, 1.5 லட்சம் ரூபாய் மதிப்பில், குளத் தை துார் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

மூன்று நாட்களில், குளத்தை துார் வாரி சுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். குளத்தில் மழைநீர் தேங்க, மழைநீர் வடிகால் இணைப்பு வழங்கவும், மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.திருவொற்றியூர்திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் வளாகத்தில் குளம் உள்ளது.நேற்று முன்தினம் (ஜூலை., 14ல்) காலை, திருவொற்றியூர், ’ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம்’ சார்பில், 50 பேர் குழு, குளத்தை சுத்தம் செய்து, உழவார பணியில் ஈடுபட்டனர்.இன்னும் பணிகள் இருப்பதால், வரும் விடுமுறை தினங்களில், தொடர் ந்து பணிகள் மேற்கொள்ள உள்ளதாக, அக்குழுவினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar