பதிவு செய்த நாள்
16
ஜூலை
2019
02:07
கோவை:ஆடி மாதம் முன்னிட்டு, சித்தாபுதுார் ஐயப்பசுவாமி கோவிலில், நாளை முதல் ஆக., 16ம் தேதி வரை, சப்தாஹம் மற்றும் நவாஹ யக்ஞம் நடக்கிறது.
நியூசித்தாபுதுார், சின்னசாமி நாயுடு ரோட்டில் உள்ள ஐயப்பசுவாமி கோவிலில், ஆடி மாதம் முன்னிட்டு, நாளை (ஜூலை., 17ல்) காலை, 6:00 முதல் மதியம், 12:30 மணி வரை, ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம் நடக்கிறது. நாளை (ஜூலை., 17ல்) முதல் ஆக., 16ம் தேதி வரை, தினமும், காலை மற்றும் மாலை நேரங்களில், சிறப்பு வழிபாடு, சேவைகள் நடக்கின்றன.