பதிவு செய்த நாள்
16
ஜூலை
2019
03:07
ரிஷிவந்தியம்:சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் மழை பெய்ய வேண்டி சிறப்பு திருபலி பூஜை நடந்தது.அகரகோட்டாலம், சூ.ராயபுரம், அணைக்கரை கோட்டாலம், ரங்கநாதபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள், மழை பெய்ய வேண்டி யும், அணை நிரம்பி விவசாயம் செழிக்கவும் சிறப்பு திருப்பலி பூஜை செய்தனர்.இதையொட்டி 4 கிராமங்களில் உள்ள தேவாலயங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட மாதா உருவ சிலையை ஊர்வலமாக மணிமுக்தா அணைக்கு கொண்டு வந்தனர்.
கடலுார் புனித வளவனார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் அருள்நாதன், பங்குதந்தை ஆரோக்ய தாஸ் தலைமையில் மழை வேண்டி சிறப்பு திருப்பலி பூஜை செய்யப்பட்டன. பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
சங்கராபுரம்சங்கராபுரம் பகுதி சிவனடியார்கள் மற்றும் சைவ சித்தாந்த அமைப்பினர் சார்பில் சங்கராபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பன்னிரு திருமுறை முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
கோவில் அறங்காவலர் கிருஷ்ணமுர்த்தி தலைமை தாங்கினார். சைவ சித்தாந்த பேராசிரியர் ஜம்புலிங்கம் முன்னிலையில் பன்னிரு திருமுறை முற்றோதல் நடந்தது.பாபு, வெங்கடேசன், கருணா, இளையாப்பிள்ளை, சிவகடாட்சம், மோகன், ஆறுமுகம் உட்பட 25 சிவனடியார்கள் பங்கேற்றனர். காலை 10:00 மணிக்கு துவங்கி 12:00 மணி வரை நடந்தது.