மாங்கனித்திருவிழா: இறைவனுக்கு அமுது படைக்கும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2019 11:07
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா திருவிழாவில் இறைவனுக்கு அம்மையார் அமுது படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுபடுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது அதன்படி கடந்த 13ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்பு. 14ஆம் தேதி பரமதத்தர் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன் தினம் பிக்ஷாடன மூர்த்தி மட்டும் பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று சிவபெருமான் அடியார் வேடத்தில் காவி உடை ருத்ராட்சை அணிந்து வீதி உலா நடந்தது அப்போது பக்தர்கள் அர்ச்சனை செய்து மாங்கனிகளை இறைத்தன அதைத் தொடர்ந்து வீதி உலா வரும் பிச்சாண்டவர் காரைக்கால் அம்மையார் எதிர் சென்று அழைத்து அமுது படையல் நிகழ்ச்சியை அம்மையார் கோவிலில் நடைபெற்றது. இதில் இனிப்பு பழங்கள் என பல்வேறு உணவுடன் இரவு 7 மணிக்கு இறைவனுக்கு அமுது படையல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அசனா எம்.எல்.ஏ. கலெக்டர் விக்ரந்தராஜா. கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர்.சீனியர் எஸ்.பி. ராகுல் அல்வா அறங்காவலர் குழுவினர் தலைவர் கேசவன்.துணை தலைவர் ஆறுமுகம். செயலாளர் பக்கிரிசாமி. பொருளாளர் ரஞ்சன். உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின் புனிதவதியார் புஷ்ப பல்லக்கில் பாண்டியநாடாகிய சித்தி விநாயகர் ஆலயத்துக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.