திண்டிவனம் பாப்பாத்தியம்மன் கோவிலில் 21ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2019 02:07
திண்டிவனம் : திண்டிவனம் பாப்பாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 21ம் தேதி நடக்கிறது. திண்டிவனம் கனகசபை தெருவிலுள்ள பாப்பாத்தியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் 21ம் தேதி காலை 6:00 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேகத்தை மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய சுவாமிகள் நடத்தி வைக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய திருப்பணிக் குழுவினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.