பதிவு செய்த நாள்
17
ஜூலை
2019
02:07
முதுகுளத்துார் : தமிழகம் முழுவதும் கோயில்களில் உள்ள தங்கத்தேர், தங்க விமானங்களை ஆய்வு செய்வதோடு, சிலை கடத்தலுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பூஜாரிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதுகுளத்துார் அய்யனார் கோயிலில் பூஜாரிகள் மாவட்ட மாநாடு மற்றும் பூசாரிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. பூஜாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு தலைமை வகித்தார்.மண்டலத் தலைவர் சண்முகசுந்தரம், ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர்.
முதுகுளத்துார் பஸ்ஸ்டாண்டில் இருந்து பூஜாரிகளின் ஊர்வலம்துவங்கியது.அரசு மருத்து வமனை வழியாக அய்யனார் கோயில் வரை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மாணிக்க வாசகம் குருக்கள்வரவேற்றார்.கிராமப்புற பூஜாரிகள் குடியிருக்ககூட வீட்டுமனை இல்லாத பூஜாரிகளுக்கு வீட்டுமனை ஒதுக்க வேண்டும்.
பூஜாரிகளுக்கு மாவட்டத்திற்கு ஆண்டுக்கு 500 வீட்டுமனைகள் வழங்க வேண்டும். வி.ஏ.ஒ., மூலம் வழங்கப்படும் வருமான சான்றிதழை இந்து சமய அறநிலையத்துறை நிராகரிக் கின்றன.
எனவே, வருமான உச்சவரம்பை முற்றிலும்நீக்க வேண்டும். அரசு கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலுக்கு சலுகை கட்டணத்தில் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கிராமப்புற பூஜாரிகள் ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டும்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் சிலைகள் மீட்கப்படுவதை வரவேற்பது. அதேசமயம் கோயில்களில் சிலைகடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோயில்களில் பணியில் இருக்கும் போது உயிரிழந்தால் குடும்ப நலநிதியாக வழங்கிய 1 லட்சம் ரூபாயை 3 லட்சம் ரூபாயாக உயர்த்திய தழிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒருகால பூஜைக்காக வழங்கப்பட்டு வரும் நிதி முறையாக வழங்கப்படாமல் நிர்வாகிகளிடமும், தனிநபரிடமும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே உண்மை பூஜாரிகளை கண்டறிந்து உரிய பூஜாரிகளிடம் ஒருகால பூஜை நிதியை வழங்கவேண்டும். பூஜாரிகளின் நலவாரிய அடையாள அட்டையை புதுபித்து தரவேண்டும். புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
மாநாட்டில்முதுகுளத்துார், கமுதி, கடலாடி, நயினார்கோவில், பரமக்குடி, போகலுார், திருவாடனை, மண்டபம், ஆர்.எஸ்.மங்களம், திருப்புலாணி, ராமநாதபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூஜாரிகள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பஞ்சவரணம் நன்றி கூறினார்.