பதிவு செய்த நாள்
17
ஜூலை
2019
03:07
கோவை: கோவை ராம்நகர், ஐயப்ப பூஜா சங்கத்தில், ஆடி உற்சவ நிகழ்ச்சி நேற்று (ஜூலை., 16ல்) துவங்கி யது.ராம்நகர் ஐயப்ப பூஜா சங்கம் சார்பில், ஆண்டு தோறும், ஆடி மாதம் முழு வதும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்தாண்டு, ஆடி உற்சவ நிகழ்ச்சி, நேற்று (ஜூலை., 16ல்) துவங்கியது.நிகழ்ச்சியை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஐயப்ப பூஜா சங்கம் சார்பில், 700 ஜாதகங்கள் அடங்கிய, ’ஜாதகங்களின் தொகுப்பிதழ்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.புத்தகத்தின் முதல் பிரதியை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன் வெளியிட, சொற்பொழிவாளர் ஸ்ரீதுஷ்யந்த் ஸ்ரீதர் பெற்றுக் கொண்டார். இந்த ஜாதக தொகுப்பிதழ், தமிழகம் முழுவதும், இலவசமாக வழங்கப் படுகிறது.நேற்று துவங்கிய ஆடி உற்சவ ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி, ஆகஸ்ட் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.
நாள்தோறும் மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை, ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. நேற்றைய (ஜூலை., 16ல்) நிகழ்ச்சியில், ’ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்தரம்’ என்ற தலைப்பில், ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் பேசுகையில், ”ஜீவ ஆத்மா, இறைவனுக்கு சொந்தமானது என நினைக்காமல், தன்னுடையது என நினைத்தால், அது அகங்காரம் ஆகிறது. தவறு செய்பவர்களை எல்லாம், அழிக்க நினைத்தால், பூமியில் உள்ள அனைவரையும் அழிக்க வேண்டும். அதனால் அவர் களின், தவறை சுட்டிக்காட்டி, திருத்த வேண்டும்,” என்றார்.நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.