மதுரை : ”தெய்வத்திடம் பக்தி இருப்பது போன்று குருவிடம் பக்தி இருக்க வேண்டும். அவர் கள்தான் வாழ்க்கையில் முன்னேற்ற முடியும்,” என மதுரை ராமகிருஷ்ண மடத்தில் நடந்த குரு பூர்ணிமா விழாவில் குரு தத்துவம்’ என்ற தலைப்பில் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் பேசினார்.
அவர் பேசியதாவது : பக்தர்கள் அவரவர் குருவவை நினைத்து பூஜிக்கும் நாள் குரு பூர்ணிமா. இந்நாளில் தான் வியாசர் அவதரித்தார். குருவும், தெய்வமும் இரு கண்களை போன்றவர்கள். தெய்வத்திடம் பக்தி இருப்பது போல குருவிடம் பக்தி இருக்க வேண்டும். சத்குரு என்பவர் மெய்ஞானம் பெற்றவராக இருக்க வேண்டும். சீடனின் நலனில் அக்கறை கொண்டிருப்பவர் சத்குரு ஆவார். சத்குருவின் பார்வையால் கோடி பாவங்கள் நிவர்த்தியாகும். கோடி நன்மை கள் உண்டாகும். யார் வேண்டுமானாலும் குரு ஆகி விட முடியாது. திருஞானசம்பந்தர், சுவாமி விவேகானந்தர் போன்று இறைவனின் உத்தரவு பெற்ற சிலரால் தான் குருவாக இருந்து மனிதகுலத்திற்கு வழிகாட்ட முடியும், என்றார்.