எழுமேட்டில் பச்சைவாழியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2019 03:07
நடுவீரப்பட்டு : பாலுார் அடுத்த எழுமேடு மன்னார்சுவாமி பச்சைவாழியம்மன் கோவிலில், நேற்று (19 ம் தேதி) ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தீமிதி திருவிழா நடந்தது.கடந்த 5 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
16 ம் தேதி முதல் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து இரவு சுவாமி வீதி உலா நடந்தது. நேற்று 19ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6:00 மணிக்கு விநாயகர், வள்ளி தேவ சேனா சுப்பரமணியர், மன்னார் சுவாமி, பச்சைவாழியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் வள்ளி தேவசேனா சுப்பரமணியர் திருக்கல்யாணம் நடந்தது.11:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண கோலத்தில் வீதி உலா நடந்தது. மாலை 5:50 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது.விழாவில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று 20ம் தேதி சனிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் இதயரசு எத்திராஜலு செய்திருந்தார்.