திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2019 01:07
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் அன்னதானம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது.
காரைக்கால் திருநள்ளார் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் நாட்டில் பல பகுதியிலிருந்து தினம் பக்தர்கள் வருகின்றனர். மேலும் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதியிலிருந்து திருநள்ளாறுக்கு வருகின்றன. திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் தங்கதேர். அன்னதானம் உள்ளிட்டவை பக்தர்கள் காணிக்கை அளிக்க கோவில் நிர்வாகம் சார்பில் பல இடங்களில் அன்னதான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அளித்த உண்டியல் நிரம்பியதால் கோவில் நிர்வாகம் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது. கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர். கட்டளை விசாரணை தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் தலைமையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் உதவியுடன் காணிக்கை உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது.