பதிவு செய்த நாள்
22
ஜூலை
2019
02:07
அரூர்: அரூர் அடுத்த, டி.அம்மாபேட்டையில் உள்ள சென்னியம்மன் கோவிலில், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையில், தென்பெண்ணை ஆற்றின் கரை யோரத்தில் சென்னியம்மன் கோவில் உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணா மலை ஆகிய மூன்று மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு, ஆடி மாதம் பிறந்த வுடன் தினமும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, ஆடிப்பெருக்கு விழாவில் இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
ஆற்றில் உள்ள பாறைகளுக்கு மஞ்சள், குங்குமமிட்டு, பொரி தூவி, பூஜை செய்து வழிபாடு நடத்தி விட்டு, ஆடு, கோழிகளை பலியிடுகின்றனர். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுவது தொடர்கதை யாக உள்ளது.
இங்கு பலியிடப்படும் ஆடு, கோழிகளின் இறைச்சி கழிவுகளை அகற்றாமல், துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, வரும் ஆடிப்பெருக்கு விழாவுக்கு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட, அடிப் படை வசதிகளை செய்து தர, வேடகட்டமடுவு பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.