Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சத்திரயான்–2 வெற்றிக்காக ... திருப்பாதிரிப்புலியூர் முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை திருப்பாதிரிப்புலியூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை சிறப்பு தரிசனம்
எழுத்தின் அளவு:
வடபழனி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை சிறப்பு தரிசனம்

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2019
11:07

சென்னை: ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பக்தர்கள் வசதிக்காக, அதிகாலை, 4:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை, சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து, வடபழனி கோவில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடபழனி முருகன் கோவிலில், 26ம் தேதி, ஆடிக்கிருத்திகை விமரி சையாக நடைபெற உள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்ய, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலின் தெற்கு ராஜகோபுரம் எதிரில், பொது தரிசனத்திற்காக, இரண்டு வரிசைகளும்; 50 ரூபாய் கட்டணத்தில், சிறப்பு தரிசனத்திற்காக, ஒரு வரிசையும் அமைக்கப்பட்டுள்ளன. வரிசையில் செல்லும் போதே, அர்ச்சனை சீட்டுகளை பெற்று கொள்ளலாம். சிறப்பு விரைவு தரிசனத்திற்கான, 100 ரூபாய் நுழைவுச்சீட்டு, கோவிலின் ராஜகோபுர வாசலில், காலை, 4:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை, விற்பனை செய்யப்படும். காவடி துாக்குவோர், மேற்கு கோபுரம் வழியாக கோவிலுக்குள் வந்து, வடக்கு மாடவீதி மற்றும் கிழக்கு மாவடவீதி வழியாக, உற்சவர் அர்ச்சனை செய்யுமிடத்தில், காவடிகளை செலுத்தலாம். காவடிக்கு, கட்டணம் ஏதுமில்லை. அதிகாலை, 4:00 – 12:00 மணிக்கு, சிறப்பு அலங்கார தரிசனம்; மதியம், 1:00 முதல், மாலை, 4:00 மணி வரை, தங்க கவச அலங்கார தரிசனம்; மாலை, 4:00 முதல், இரவு, 11:00 மணி வரை, சந்தன காப்பு புஷ்ப அலங்கார தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடிநீர், சுகாதாரம், வாகன நிறுத்துமிடம், கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கோவிலுக்கு வந்து செல்ல, மாநகர போக்குவரத்து கழகத்தின் வாயிலாக, சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar