பதிவு செய்த நாள்
23
ஜூலை
2019
12:07
ஆவடி: சுந்தர்ராஜபெருமாள் கோவில் குளத்தை ஆழப்படுத்தி, சீரமைக்கும் பணியை, அமைச்சர், பாண்டியராஜன், நேற்று (ஜூலை., 22ல்) துவக்கி வைத்தார்.
சென்னை, ஆவடி அடுத்த கோவில்பதாகை கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப் பாடில், சுந்தர்ராஜபெருமாள் கோவில் உள்ளது. கோவிலின் முன்புறம், 60 சென்ட் பரப்பளவில், 15 அடி ஆழம் திருக்குளம் உள்ளது. அந்த குளம், இப்போது துார்ந்துள்ளது.
அதை துார் வாரி, மேலும், 5 அடிக்கு ஆழப்படுத்த, கோவில் நிர்வாகம் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர், பாண்டியராஜன் ஆகியோர், முயற்சி மேற்கொண்டனர்.இதையடுத்து, அரசு தரப்பில், 56 லட்சம் ரூபாய் மற்றும் அமைச்சரின், மா.பா., அறக்கட்டளை சார்பில், 44 லட்சம் ரூபாய் என, 1 கோடி ரூபாய் மதிப்பில், குளத்தை துார் வாரி, படித்துறைகளை சீரமைக்க முடிவானது.நேற்று (ஜூலை., 22ல்) காலை, 9:45 மணிக்கு, சிறப்பு பூஜையுடன், குளத்தை துார் வாரும் பணியை, அமைச்சர், பாண்டியராஜன் துவக்கி வைத்தார். இந்த பணி, ஒரு மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.