பதிவு செய்த நாள்
23
ஜூலை
2019
02:07
நரியம்பாக்கம்: நரியம்பாக்கம் கோவிலில், அம்மன் கத்தியேறும் விழா நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, சாலமங்கலம் ஊராட்சி, நரியம்பாக்கம் கிராமத்தில், முந்திபிடித்த முத்தாலம்மன் கோவில் உள்ளது.
இங்கு, 19ம் ஆண்டு, ஆடி திருவிழா, கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள், காப்பு கட்டி விரதம் இருந்தனர்.தொடர்ந்து, ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையான நேற்று முன்தினம் (ஜூலை., 21ல்), அம்மன் கத்தி ஏறும் நிகழ்வும் நடந்தது.
தொடர்ந்து, தீ மிதித்து, பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.