பதிவு செய்த நாள்
23
ஜூலை
2019
02:07
அத்தி வரதர் வைபவ பணிகளில், பல துறை அதிகாரிகள் பங்கேற்று உள்ளதால், ’தங்களின் வேலையை யாரும் கவனிப்பதில்லை’ என, பொதுமக்களிடையே புகார் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவம், ஜூலை, 1ம் தேதி துவங்கியது. இந்த வைபவத்திற்கு, வெளியூர், வெளி நாடுகளில் இருந்து, தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, அத்தி வரதரை தரிசிக்கின்றனர்.பக்தர்கள் வசதிக்காகவும் மற்றும் பிற பணிகளுக்காகவும், பல துறை அதிகாரிகள், இந்த வைபவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணிகளில் பங்கேற்காத சில அதிகாரிகளுக்கும், ’பிசி’யாக இருப்பது போல் காட்டிக்கொள் கின்றர்.இதனால், குடிநீர் மற்றும் பிற அலுவலக பணிகள் சம்பந்தமாக, பொதுமக்கள் அளிக் கும் புகார்கள் தேக்கமடைந்து உள்ளதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக, வாலாஜாபாத் பேரூராட்சியில், குடிநீர் மற்றும் கட்டட அனுமதி தொடர்பாக, புகார் அளிக்க சென்றால், அலுவலகத்தில், அதிகாரிகள் யாரும் இருப்பதில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், வீண் அலைச்சல் ஏற்படுவதாகவும், அவர்கள் நொந்து கொள்கின்றனர்.எனவே, பொதுமக்கள் அளிக்கும் புகார் மற்றும் கோரிக்கை தொடர்பான மனுக்களுக்கு, உடனடி தீர்வு காண, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரி க்கை எழுந்துள்ளது.