பதிவு செய்த நாள்
25
ஜூலை
2019
11:07
பழநி : பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கையில் 28 நாட்களில் ரூ.2 கோடியே 42 லட்சத்து 33ஆயிரம் காணிக்கையாக கிடைத்துள்ளது. பழநி முருகன் கோயில் கார்த்திகை மண்டபத்தில் நேற்று உண்டியல் எண்ணிக்கை நடந்தது. அதில், ரொக்கமாக ரூ. 2 கோடியே 42 லட்சத்து 33ஆயிரத்து 570ம், தங்கம்- 957 கிராம், வெள்ளி-9,930கிராமும், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற வெளிநாட்டு கரன்சிகள்- 829 கிடைத்துள்ளது. பக்தர்கள் தங்கம், வெள்ளியிலான வேல், தாலி, பாதம், கொழுசு, மோதிரம் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார், திண்டுக்கல் உதவி ஆணையர் அனிதா, மேலாளர் உமா, அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.