Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பங்குனி அமாவாசை பண்ணாரியில் கூட்டம் அரசூர் பூச்சிக்காடு சாஸ்தா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனதேவதைக்கு கடா வெட்டி வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2012
10:03

உடுமலை : உடுமலை அருகே தண்ணீர் இல்லாமல் வாடும் 3 ஆயிரத்து 500 ஏக்கர் நெல் பயிர்களை காப்பாற்ற; வனதேவதைக்கு கிடா வெட்டி மலைவாழ் மக்களுக்கு விவசாயிகள் விருந்தளித்தனர். உடுமலை அமராவதி அணை மூலம் கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டு 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அமராவதி அணையின் தலைமடையாக உள்ள இப்பகுதிக்கு கூட இந்தாண்டு போதுமான தண்ணீர் இல்லாமல் அணை வறண்டுள்ளது. கல்லாபுரம், ராமகுளம் பாசனப்பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நெல் மணி பிடிக்கும் தருணத்தில் உள்ளது. மழைப்பொழிவு இல்லாத நிலையில், அமராவதி அணையில் தாழ்வான பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை சிறிய வாய்க்கால் வெட்டி தண்ணீர் கொண்டு செல்ல விவசாயிகள் முயன்றனர். இம்முயற்சியிலும், போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவிட்டுள்ள நிலையில் பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் வேதனையடைந்தனர். இதனையடுத்து, முதியவர்கள் ஆலோசனை அடிப்படையில் மழை வேண்டி, பாரம்பரியாக மேற்கொள்ளப்படும் சிறப்பு பூஜையை உடனடியாக நடத்த விவசாயிகள் திட்டமிட்டனர்.
நேற்று காலை அமராவதி அணையின் அருகேயுள்ள மலைப்பிடாரியம்மன் கோவிலில் மழை வேண்டி விவசாயிகள் கிடா வெட்டினர். தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அப்பகுதியிலுள்ள கரட்டுப்பதி மலைவாழ் மக்களுக்கு கறி விருந்து வழங்கப்பட்டது. விவசாயிகள் கூறியதாவது:ஆண்டுதோறும் கோடை காலம் துவங்கியதும் மழை வேண்டி மலைப்பிடாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்துகிறோம். இந்தாண்டு அமராவதி அணையில் தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளது. மழையும் தாமதித்து வருவதால், மழை வேண்டி பூஜை நடத்தினோம். மலைவாழ் மக்களுக்கு திருப்தியாக விருந்து உண்ட பின்னரே மற்றவர்கள் உணவு உண்ண அனுமதியளிக்கிறோம். இயற்கையோடு இணைந்து வாழும் மலைவாழ் மக்களை திருப்திபடுத்துவதன் மூலம் மழை கிடைக்கும் என்பது இப்பகுதியின் நம்பிக்கையாகும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி ... மேலும்
 
temple news
ஹாசன்: பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், 14 நாட்களுக்குப் பின், நேற்று நடை அடைக்கப்பட்டது. இந்தாண்டு, 25 ... மேலும்
 
temple news
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar