பதிவு செய்த நாள்
26
ஜூலை
2019
02:07
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், மேற்கு ராஜ வீதியில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி கிருத்திகை விழா, இன்று (ஜூலை., 25ல்) விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
ஆடி கிருத்திகையையொட்டி, அதிகாலை, 4:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், அதை தொடர்ந்து சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது.பகல், 1:00 மணிக்கு, பக்தர்கள் எடுத்து வரும் காவடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறுது.பகல், 2:30 மணிக்கு, ஆடி கிருத்திகை சிறப்பு அபிஷேகமும், இரவு, 10:00 மணிக்கு, வள்ளி, தெய்வானையருடன் சுப்பிரமணிய பெரு மாள் வீதியுலாவும் நடைபெறுகிறது.பக்தர்களின் பாதுகாப்புக்காக சிறப்பு மருத்துவக் குழு, தீயணைப்புத் துறை மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.