Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீழக்கரையில் முளைப்பாரி உற்ஸவ ... மானாமதுரையில் ஆக.7ல் வீர அழகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாதசுவாமி ஆடிப்பூர விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2019
03:07

பரமக்குடி : பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாண உற்ஸவ விழா நேற்று (ஜூலை., 25ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது.

மூர்த்தி, தீர்த்தம், தலம் என்றசிறப்புகள் பெற்ற நயினார்கோவிலில் ஆண்டு முழுவதும் பக்தர் கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த செல்வது வழக்கம். இக்கோயிலின் ஆடிப்பூர திருக் கல்யாண திருவிழா ஜூலை 24 மாலை 6:00 மணிக்கு அனுக்ஞையுடன் துவங்கியது. நேற்று (ஜூலை., 25ல்) காலை 7:45 மணிக்கு சவுந்தர்யநாயகி அம்மன் சன்னதியில் உள்ளகொடி மரத்தில் நந்தி கொடியை வேத மந்திரம் முழங்க சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.

இரவு இந்திர விமானத்தில் அம்பாள் எழுந்தருளினார்.தினமும் காலை, மாலை என அம்மன வெள்ளி பல்லக்கு, அன்னம், சிம்மம், கமலம், கிளி, குதிரை வாகனங்களில் பல்வேறு அவதார ங்களில்வீதிவலம் வருகிறார். ஆக., 2 ல் காலை 8:30 முதல் 9:15 மணிக்குள் அம்மன் தேரோட் டம் நடக்கிறது. இரவு காமதேனு வாகனத்திலும், மறுநாள்காலை 11:00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது.

ஆக., 4 காலை 6:00 மணி முதல் அம்மன் தபசு மண்டபத்தில் எழுந்தருளியதும்சுவாமி -அம்மன் மாலை மாற்றலும், மாலை 6:00 மணிக்கு அம்மன்சயன கோலத்தில் புஷ்ப பல்லக்கில் வீதி வலம் வருவார். ஆக., 5 காலை 9:00 முதல் 10:00 மணிக்குள் நாகநாதசுவாமி - சவுந்தர்யநாயகி அம்பாளுக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடக்கிறது. இரவு திருமணதிருக்கோலத்தில் மின் னொளி தீப ரதம், தென்னங்குருத்து சப்பரத்தில் சுவாமி, அம்பாள் தனித்தனியாக வீதிவலம் வருவர். ஆக., 6, 7 ல் ஊஞ்சல் உற்சவமும், ஆக., 8 ல் காப்பு களையப்பட்டு, ஆக., 11 ல் உற்சவ சாந்தியுடன்விழா நிறைவடைகிறது.

ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல்பாண்டியன், சரக பொறுப்பாளர் வைரவசுப்பிரமணியன் செய்து உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar