Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரையில் வைகைக்கு ஆரத்தி வழிபாடு திருத்தணி, முருகன் கோவிலில் தெப்பத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா
எழுத்தின் அளவு:
ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2019
01:07

 கீழக்கரை, :ராமநாதபுரம் மாவட்டம்ஏர்வாடி தர்காவில் மதநல்லிணக்க சந்தனக் கூடு விழா நடந்தது.ஏர்வாடியில் அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்காவின் 845ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவிற்கான மவுலீது எனும் புகழ்மாலை  ஜூலை 4 மாலை 6:30 மணிக்கு துவங்கியது.


ஜூலை 13ல் அடிமரம் ஊன்றப்பட்டது. ஜூலை 14 மாலை கொடி ஊர்வலமும், கொடியேற்றமும் நடந்தது.ஜூலை 26 மாலை 6:00 மணி முதல் அதிகாலை 3:00 மணிவரை பாதுஷா நாயகத்தின் மவுலீது ஓதப்பட்டது. நேற்று  அதிகாலை 4:00 மணிக்கு ஏர்வாடி நல்ல இப்ராகீம் மகாலில் இருந்து 13 குதிரைகள் நாட்டியமாடியவாறு செல்ல, ஒரு யானைக்கு முன்பாக சந்தனக் குடங்களை தர்கா ஹக்தார்கள் கொண்டு வந்தனர். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தேரை அனைத்து  சமுதாயத்தினரும் இழுத்தனர்.தீப்பந்தம், பச்சை பிறைக் கொடிகள் ஏந்தியவாறு ஊர்வலம் தர்காவை மூன்று முறை வலம் வந்த பின் அதிகாலை 5:00 மணிக்கு பாதுஷா நாயகத்தின் அடக்கஸ்தலத்தில்சந்தனம் பூசப்பட்டு, வண்ணப் போர்வை, மல்லிகை சரத்துடன்  போர்த்தப்பட்டது. மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் இவ்விழாவில் அனைத்து சமூகத்தினர் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர். ஆக., 2 அன்று கொடியிறக்கம் செய்யப்பட்டு நெய்சோறு  அன்னதானம் வழங்கப்படும்.ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார்கள், பொதுமகா சபையினர் செய்துஇருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 
temple news
விஜயநகரா: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதன் முறையாக, ஹம்பிக்கு வந்தார். வரலாற்று பிரசித்தி ... மேலும்
 
temple news
டில்லி; இந்தியா வந்துள்ள மங்கோலியாவின் ஜனாதிபதி குரேல்சுக் உக்னா தனது குடும்பத்தினறுடன் டில்லி ... மேலும்
 
temple news
அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் 2 கோடி ரூபாயில் தங்க தேர் அமைக்கும் பணி நடைபெற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை வாயிலாக 53 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar