பதிவு செய்த நாள்
28
ஜூலை
2019
01:07
திருத்தணி: திருத்தணி, முருகன் கோவிலில், இன்று, 3ம் நாள் தெப்பத் திருவிழாவுடன் ஆடி மாத கிருத்திகை விழா நிறைவடைகிறது.திருத்தணி, முருகன் கோவிலில், 24ம் தேதி முதல், இன்று வரை ஆடி கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்ப விழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம், ஆடி கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழா நடந்தது. நேற்று, இரண்டாம் நாள் தெப்பத் திருவிழாவையொட்டி, அதிகாலை, 3:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.நேற்று, பல்லாயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வந்து வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார்.பின், சிறப்பு தீபாராதனையுடன், உற்சவர், ஐந்து முறை குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று மாலை, மூன்றாம் நாள் தெப்பத் திருவிழாவுடன் ஆடி கிருத்திகை விழா நிறைவடைகிறது.