மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூலை 2019 02:07
மங்கலம்பேட்டை:மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு நேற்று (ஜூலை., 29ல்) பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதையொட்டி காலை 7:00 மணிக்கு மாத்ருபுரீஸ்வரர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, மாலை 4:00 மணியளவில் பால், சந்தனம், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், திரவியப் பொடி உள்ளிட்ட திரவியங்களால் நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடந்தது. மாலை 5:00 மணியளவில் சந்தன காப்பு அலங்காரத்தில் நந்தி பகவான் அருள்பாலித்தார்.