திருவாடானை : திருவாடானை அருகே கற்காத்தகுடி கிராமத்தில் உள்ள புனித லயலோ இஞ்ஞாசியார் ஆலய திருவிழா ஜூலை 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆக.,3ல் தேர்பவனியும், மறுநாள் கொடியிறக்கமும் நடைபெறும். விழா நாட்களில் பாதிரியார் சாமு இதயன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறும்.