பதிவு செய்த நாள்
30
ஜூலை
2019
03:07
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட சிவன் கோவில்களில், பிரதோஷத்தையொட்டி நேற்று (ஜூலை., 29ல்), சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக அலங்காரங்கள் நடந்தன. தர்மபுரி நெசவாளர் காலனி மகா லிங்கேஸ்வரர் கோவில் பிரகாரத்தில் உள்ள நந்திக்கு, நேற்று (ஜூலை., 29ல்)மாலை, பிரதோஷ த்தையொட்டி, பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட, பல்வேறு திரவி யங்களால் அபிஷே கம் நடந்தன. நந்திக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மூலவர் மகாலிங்கேஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், மொடக்கேரி ஆதிசக்தி சிவன் சித்தர்பீடம் உள்பட, மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில், பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று (ஜூலை., 29ல்) சிறப்பு பூஜைகள் நடந்தன.