Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லம்பள்ளி அருகே முனியப்பசாமி ... கண்டாச்சிபுரம் அடுத்த வீரங்கிபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆத்தூர் பிரதோஷ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2019
03:07

ஆத்தூர்: சோமவார பிரதோஷத்தையொட்டி, ஆத்தூர் சுற்றுவட்டார சிவன்  கோவில்களில் நடந்த பூஜையில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில், மூலவர் கைலாசநாதர், ஆதிபராசக்தி மற்றும்  நந்தி சுவாமி க்கு பால், பழம், பன்னீர், மஞ்சள், தயிர், வெண்ணெய் போன்ற, 16  வகையான அபிஷேக பூஜை கள் நடந்தன. பின், கைலாசநாதர், ஆதிபராசக்தி, நந்தி  சுவாமி ஆகியோர் மலர், காய்கறி, பழங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்ம லேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர்,  தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வீரகனூர் கங்காசவுந்தரேஸ்வரர் உள்ளிட்ட  சிவன் கோவில்களில், பிரதோஷ பூஜை நடந்தது. ஆத்தூர், தலைவாசல்,  பெத்தநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.

* சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், நந்தியம்பெருமானுக்கு பால்,  தயிர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களால் சிறப்பு  அபிஷேகம் செய்யப் பட்டது. காளை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில்  எழுந்தருளிய பெரியநாயகி சமேத கரபுரநாதரை சிவ, சிவ கோஷங்கள் முழங்க,  பக்தர்கள் தோளில் சுமந்து கொண்டு திருக் கோவிலை மூன்று முறை வலம்  வந்தனர்.

* பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டேஸ்வரர், ஏத்தாப்பூர்  சாம்பமூர்த்திஸ்வரர் கோவில், கல்யாணகிரி தேன்மலை சிவாலயம், கொட்டவாடி,  பேளூர் கரடிப்பட்டி கருணாக ரேஸ்வரர் கோவில்களில் நேற்று 29ம்  தேதி, மாலை, 6:00  மணிக்கு மேல், நந்திக்கு பால், திருமஞ்சனம், தயிர், தேன், பழவகைகள், இளநீர்  ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. இதேபோல, வாழப் பாடி அருகே பேளூர்  தான்தோன்றீஸ்வரர் கோவில், காசிவிஸ்வநாதர் கோவிலிலுள்ள நந்தி  பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர், கோவில் உட்பிரகார த்தில் உற்சவ  மூர்த்தி களான நடராஜர், அம்பாள் வலம் வந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவா: இந்தியாவின் மிக உயரமான ஸ்ரீராமரின் வெண்கல சிலையை கோவாவின் ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகாலி ... மேலும்
 
temple news
உடுப்பி; உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தரிசனம் தரிசனம் செய்தார். தொடர்ந்து ... மேலும்
 
temple news
மும்பை; காஞ்சி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை மும்பையில் உள்ள ஸ்ரீ ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் 5ம் நாளானா காலை  உற்சவத்தில் கண்ணாடி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் திருகார்த்திகை தீபத்திருவிழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் நேற்று (நவ.,27) மாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar