விழுப்புரம் : விழுப்புரம் விஸ்வகர்மா மண்டபத்தில், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் ஸ்ரீ குருபூஜை விழா நடந்தது.டாக்டர் சஞ்சீவி சந்திரசேகர் தலைமை தாங்கினார். நகர செயலர் முரளிதரன் முன்னிலை வகித்தார். தென்பாரத அமைப்பு செயலர் ஆனந்த ரகுநாதன், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்க கொடியை ஏற்றி, குருபூஜையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், செய்தி தொடர்பாளர் சூரியநாராயணன், உடற் பயிற்சியாளர் பழனிகுமார் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.