Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரம் ரேணுகாதேவி அம்மன் ... மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் ஆடி திருவிழா மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனம் அருகே கீழடியில் உறைகிணறு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
திருப்புவனம் அருகே கீழடியில் உறைகிணறு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2019
03:07

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5ம் கட்ட அகழாய்வில் தற்போது உறைகிணறு, மண்பானை மூடி, உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடியில் தமிழக தொல்லியல் துறை மூலம் 5ம் கட்ட அகழாய்வு கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கப்பட்ட அகழாய்வில் சுவர், வட்டப்பானை உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. தற் போது உறைகிணறு, தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்படும் ஜக்மூடி உள்ளிட்டவை கண்டறி யப்பட்டன.

தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறியது: 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தண்ணீரை பாதுகாப்பாக வைத்திருந்து அருந்த கற்றுள்ளனர். உறைகிணறுகள் அனைத்தும் 5 முதல் 7 அடி உயரம் வரையே இருப்பதால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் 5 அடியிலேயே கிடைத்திருக்க வாய்ப்புள்ளது.

இந்த உறைகிணறுகளை தொழில்நுட்ப ரீதியில் அமைத்துள்ளனர்.  உறைகிணறுகள் அனைத் தும் இரண்டு முதல் 7 அடுக்குகள் உள்ளவாறே கண்டறியப்பட்டுள்ளன. உறைகளை ஒன்றுக் குள் ஒன்றாக அமிழும்படி வடிவமைத்து கிணறுகளில் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் உறைகிணறுகள் சரியாமல் இருக்கவும் தண்ணீர் ஊற்றை விலங்குகள் உள்ளிட்டவை சேதப் படுத்தாமல் இருக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். கிணற்றில் இருந்து தண்ணீரை எடுக்க மண் பானைகள், ஜக் போன்றவற்றை பயன்படுத்தியுள்ளனர். முதல் கட்ட அகழாய்வு நடந்த இடத்தை சுற்றி 260 மீட்டர் தூரத்தில் 5ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. எனவே இப்பகுதியில் குடியிருப்புகள் இருந்ததற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.இவ்வாறு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar