பதிவு செய்த நாள்
31
ஜூலை
2019
03:07
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் உள்ள, சிவன் கோவில்களில் ஆடி மாத சிவராத்திரி நாளையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தன. குமாரபாளையத்தில், ஆடி மாத சிவராத்திரி நாளையொட்டி அக்ரஹாரம் காசிவிஸ்வேஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு மஞ்சள், திருமஞ் சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிக்க, பக்தர்கள் பல்லக்கை சுமந்தவாறு கோவிலை வலம் வந்தனர். இதேபோல், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவில், கோட்டைமேடு கைலாச நாதர் கோவில், சவுண்டம்மன் கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிவபெருமானு க்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.