Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி கோவில்களில் ஆடி அமாவாசை ... பேரூர் நொய்யல் படித்துறையில், ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு பேரூர் நொய்யல் படித்துறையில், ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி அருகே, 700 ஆண்டு பழமை வாய்ந்த கோவில்
எழுத்தின் அளவு:
அவிநாசி அருகே, 700 ஆண்டு பழமை வாய்ந்த கோவில்

பதிவு செய்த நாள்

01 ஆக
2019
01:08

அவிநாசி:அவிநாசி அருகே, 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை, புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண் டுமென, பக்தர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே முறியாண்டம்பாளையம் ஊராட்சி, பெரியகாட்டுப்பாளையத்தில், பழமை வாய்ந்த வெங்கட்ரமண சுவாமி கோவில் உள்ளது. கோவிலில், திருப்பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்த மாதம் கும்பாபி ஷேகம் நடத்த அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

கோவிலின் சிறப்பு குறித்து, திருப்பூர் வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது:அவிநாசி அருகே பெரியகாட்டுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி கோவிலில் உள்ள நுணுக்கமான வேலைபாடுகளை பார்க்கும் போது, கோவில் கட்டப்பட்டு, 700 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம். கருவலுா ரில் உள்ள பெருமாள் கோவிலுக்கும், இக்கோவிலுக்கும் தொடர்பு இருக்கலாம்.கோவிலில் உள்ள துளசி மாடத்தில், நான்கு சிற்பங்கள் உள்ளன. அதில், பெருமாள், சயன கோலத்தில் காட்சியளிக்கிறார். கண்ணன், புல்லாங்குழல் இசைத்தபடியும், காலிங்கநர்த்தன அவதாரத்தில், கையில் பாம்பு பிடித்தபடியும், மூர்த்தி சிலையும் உள்ளது.சிலைகள் அனைத்தும், திருமாலின் அவதாரங்களாக உள்ளன. ஆறு மற்றும் நீர்நிலை உள்ள பகுதியை அப்பகுதி மக்கள், புனிதமாக கருதியுள்ளனர். நீர்நிலை உள்ள இடங்களில் கோவில் கட்டியுள்ளனர்.

இதனால், கோவிலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும், புனிதமும், அங்குள்ள நீர் நிலைக்கும் கிடைக்கும் என்பதே அதன் நோக்கம். பழமை வாய்ந்த இக்கோவில் கூட, நீர்நிலை நிறைந்த அழகிய இயற்கை சூழலில் அமைந்திருக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.கிராம மக்கள் கூறுகையில், இந்த கோவிலில், 2006ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், சில திருப்பணிகள் செய்து, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக அற நிலையத்துறையினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். துறை ரீதியான ஒப்புதல் கிடைத்தவுடன், கும்பாபிஷேக தேதி அறிவிக்கப்படும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தை மாதத்த பிரம்மோற்சவ விழாவிற்கு உத்தரவு வாங்குவதற்காக சென்னை கந்தகோட்ட ம் முத்துக்குமார ... மேலும்
 
temple news
பாலக்காடு; ​கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருர் அருகே பாரதப்புழை (நிளா) நதியில் கங்கையின் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, பிப்., 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படும் என, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு கிரி வீதியில் எழுந்தருளியுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar