மயிலம் : திருவக்கரையில் வக்கிரகாளியம்மன், சந்திர மவுலீஸ்வரர் கோவிலில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஜோதி தரிசனம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று (ஜூலை., 31ல்) காலை 6:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், வரதராஜ பெருமாள், சந்திரமவுலீஸ்வரர், குண்டலி மாமுனி, வக்கிரகாளியம்மன், வக்கிர சனி ஆகிய சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு வக்கிரகாளியம்மன் கோவிலில் ஜோதி காண்பித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.