கடலுார்:கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி சுவாதி நட்சத்திரத்தில் நடைபெறும் கருட ஜெயந்தி விழா, 7 ம் தேதி காலை, 7:00 மணிக்கு வேதபாராயணத்துடன் துவங்குகிறது.8:00 மணிக்கு சிறப்பு ஹோமம் நடக்கிறது. 12 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கருட பகவானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.இரவு 8 மணிக்கு பெருமாள் மற்றும் கருடன் எதிர்சேவை புறப்பாடு மற்றும் புஷ்ப யாகம் நடக்கிறது.