திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் ஆடிப்பூரத் திருவிழா நடந்தது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்ஸவர் சன்னதியில் கோவர்த்தனாம் பிகை எழுந்தருளினார்.அம்பாள் முன், வெள்ளிக்குடத்தில் புனிதநீர் நிரப்பி, பூஜைகள் நடந்தது. அரிசி, நெல், வெல்லம், காதோலை கருகமணி, வேப்பிலை, வளையல்கள், வாழைப்பழம் வைத்து யாகம் வளர்க்கப்பட்டு அம்பாளுக்கு காப்பு கட்டப்பட்டது.
படிகளில் வைக்கப்பட்டிருந்த நெல், அரிசி அம்பாள் முன் மூன்றுமுறை ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி முடிந்து புனிதநீர் அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு வளையல்கள் வழங்கப்பட்டன. இரவு அம்பாள் சிம்மாசனத்தில் வீதி உலா எழுந்தருளினார். திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.