திருக்கோவிலுார் தேரடி விநாயகருக்கு சந்தனகாப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2019 03:08
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், கீழையூர் தேரடி விநாயகர் கோவிலில் சந்தனக்காப்பு விழா நடந்தது.விழா கடந்த 3ம் தேதி துவங்கியது. அன்று மாலை 4:00 மணிக்கு அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு சுவாமி காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது.
தொடர்ந்து 4ம் தேதி காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 7:00 மணிக்கு சந்தனக்காப்பு அலங்கார த்தில் சோடசோபவுபசார தீபாராதனை நடந்தது.