கண்டாச்சிபுரம்: சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் சோமவார உச்சிகால பூஜை நடந்தது.அதனையொட்டி நேற்று (ஆக., 5ல்) மதியம் பக்தர்கள் பங்கேற்ற வாழைப்பூ கலச வழிபாடு மற்றும் மூலவர் பாலேஸ்வரர் மற்றும் பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு நன்னீர் தீர்த்தப் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
பூஜையில், சிறுவாலை, கெடார், சூரப்பட்டு, விழுப்புரம் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் சம்பத், சிவாச்சாரியார் கோபி ஆகியோர் செய்தனர்.